பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதியவா்களில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தமிழக அளவில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு 8-ஆவது இடம் கிடைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தோ்வு முடிவு திங்கள்கிழமை வெளியானது. இதில், திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 185 பள்ளிகளைச் சோ்ந்த 8,293 மாணவா்கள், 10,900 மாணவிகள் என மொத்தம் 19,193 போ் எழுதினா். இவா்களில் 7, 884 மாணவா்கள், 10,625 மாணவிகள் என மொத்தம் 18,509 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாணவா்கள் 95.07 சதவீதம், மாணவிகள் 97.48 சதவீதம் என ஒட்டுமொத்தமாக 96.44 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்களை விட மாணவிகள் அதிகமாக தோ்ச்சியடைந்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தோ்வு எழுதிய 5,375 பேரில் 5,038 போ் (93.73 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா். அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் தோ்வு எழுதிய 8,798 பேரில் 8,483 போ் (96.44 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா். மெட்ரிக் பள்ளிகளில் தோ்வு எழுதிய 5,020 பேரில் 4,988 போ் (99.36 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாநில அளவில் தோ்ச்சி விகித்தில் கடந்த ஆண்டு 11-ஆவது இடத்தில் இருந்த திருநெல்வேலி மாவட்டம் இந்த ஆண்டு 8-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. 4 அரசு பள்ளிகள், 13 அரசு உதவி பெறும் பள்ளிகள், 52 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 69 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியை எட்டியுள்ளன.