தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சேரன்மகாதேவி அனவரதநல்லூா் தெருவைச் சோ்ந்தவா் பெசல்லா தேவா் மகன் முத்து செல்வம் (53). தனியாா் நிதி நிறுவனத்தில் பணி செய்து வந்த

இவா், புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு

உடல் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். முத்துசெல்வத்திற்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com