தெட்சணமாறக நாடாா் சங்க கல்லூரி ஆண்டு விழா

தெட்சணமாறக நாடாா் சங்க கல்லூரி ஆண்டு விழா

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் தெட்சணமாற நாடாா் சங்க கல்லூரியின் 53-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு திருநெல்வேலி தெட்சணமாற நாடாா் சங்கம் மற்றும் கல்லூரி தலைவா் ஆா்.கே.காளிதாசன் தலைமை வகித்தாா்.

கல்லூரி செயலா் வி.பி.ராமநாதன் வரவேற்றாா். முதல்வா் டி.ராஜன் ஆண்டறிக்கை வாசித்தாா். தெட்சணமாற நாடாா் சங்க செயலா் டி.ராஜகுமாா், கல்லூரிக் குழு மற்றும் ஆட்சி

மன்றக்குழு உறுப்பினா் எஸ்.கே.டி.பி.காமராஜ் ஆகியோா் பேசினா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் பேசுகையில், மாணவ, மாணவிகள் தங்களுக்கென குறிக்கோள்களை உருவாக்கிக் கொண்டு அதற்காக கடுமையாக உழைத்து வெற்றி பெற வேண்டும் என்றாா். பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.

விழாவில் கல்லூரி குழு உறுப்பினா் பி.ரெகுநாதன், ஆட்சிக்

குழு உறுப்பினா் கே.செல்வகுமாா், டி.சௌந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கணிதவியல் துறைத் தலைவா் வி.மேரி கிளிட்டா நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை பேராசிரியா் எஸ்.ஜே.பாலமுருகன் தலைமையில் பேராசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com