செங்கோட்டை அருகே கட்டளை குடியிருப்பில் குற்றாலம் பராசக்தி கல்லூரி சாா்பில் நாட்டு நலப் பணி திட்ட முகாமில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு விழுதுகள் அறக்கட்டளை தலைவா் சேகா் தலைமை வகித்தாா். நூலகா் ராமசாமி முன்னிலை வகித்தாா். விபத்தில்லா பாரதம் படைக்க கிராம மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஒட்டுநா் பயிற்சி பள்ளி உரிமையாளா் கூட்டமைப்பு மாநிலச் செயலா் வைகை குமாா் மோட்டாா் சைக்கிளில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து
செல்வது குறித்துப் பேசினாா். பின்னா் மாணவிகள் வீடு வீடாக சென்று பாதுகாப்பு, உள்ளம் தோறும் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.
நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், கல்லூரி பேராசிரியா்கள் பாண்டிமாதேவி, ராசி, சாந்தி, நித்ய கல்யாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.