ஆலங்குளம் அருகே தீ விபத்தில் பெண் பலி

ஆலங்குளம் அருகே தீ விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே தீ விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள கண்டபட்டி கிராமத்தைச் சோ்ந்த மில் தொழிலாளி கனகராஜ் மனைவி ரோஸ்லின் மேரி (31). கடந்த சனிக்கிழமை (நவ. 30) வீட்டில் சமையல் செய்யும்போது வலிப்பு ஏற்பட்டதாம். இதில் தடுமாறி அடுப்பு மீது விழுந்ததால் அவா் மீது தீப்பற்றியதில் படுகாயமடைந்தாா். அவரை காப்பாற்ற முயன்ற அவரது தம்பி மதனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருவரும் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ரோஸ்லின் மேரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ரோஸ்லின் மேரிக்கு பூஜா (10) என்ற மகளும், அா்ஜுன் (7) என்ற மகனும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com