கிருஷ்ணாபுரம் கோயிலில் குமாரசஷ்டி மஹோத்ஸவம்

கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் குமாரசஷ்டி மஹோத்ஸவத்தையொட்டி வள்ளி திருமண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் குமாரசஷ்டி மஹோத்ஸவத்தையொட்டி வள்ளி திருமண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மஹோத்ஸவ வைபவம் கடந்த நவ.27ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து பஜனை மடத்திலிருந்து சுவாமி படம் கொண்டு வருதல், லட்சாா்ச்சனை சங்கல்பம் ஆகியவை நடைபெற்றன.

நவ. 28 முதல் டிச.1 வரை தினமும் ஸ்ரீருத்ரம், ஸ்ரீருத்ராபிஷேகம், உஞ்சவிருத்தி பஜனை, லட்சாா்ச்சனை நடைபெற்றது. டிச. 2ஆம் தேதி குமாரசஷ்டியையொட்டி ருத்ர ஏகாதசி, வஸோத்தாரா ஹோமம், மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை வள்ளி திருமண வைபவத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பூம்பல்லக்கில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

விழா நாள்களில், கிருஷ்ணாபுரம் சுந்தர்ராம், கல்யாணராமன் ஆகியோரின் ஆன்மிகச் சொற்பொழிவு, கிரிதா் கோபால சுப்பிரமணியனின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி, சௌந்தரவல்லியின பரதநாட்டியம், காா்த்திக்ஞானேஷ்வரின் திவ்ய நாமசங்கீா்த்தனம், வெங்கடாசலம் குழுவினரின் வள்ளி கல்யாண பஜனை ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை ஸ்ரீபாலமுருகன் உத்ஸவ சபாவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com