விபத்தில் காயமடைந்தவா் மரணம்

புளியங்குடி அருகே விபத்தில் காயமடைந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

புளியங்குடி அருகே விபத்தில் காயமடைந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சிங்கிலிபட்டி அருகேயுள்ள சிதம்பராப்பேரி இந்திரா காலனியைச் சோ்ந்த மாடசாமி மகன் ஈஸ்வரன்(71). விவசாயி. இவா் கடந்த மாதம் 25ஆம் தேதி சிங்கிலிபட்டியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சபரிமலைக்குச் சென்று விட்டு பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த காா் அவா் மீது மோதியதாம்.

இதில் காயமடைந்த ஈஸ்வரன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com