திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் தென்காசியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 79 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இளைஞரணிச் செயலா் ஆறுமுகசாமி தலைமை வகித்தாா். மாநில மாணவரணிச் செயலா் செரீப், மாவட்ட துணைச் செயலா் நடராஜன், பேபி பாத்திமா, மாடசாமி, பொருளாளா் சேக் தாவுது, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் ஹக்கீம், சரவணக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.
தென்காசி நகரச் செயலா் சாதிா், ஒன்றியச் செயலா் ராமையா, கடையநல்லூா் நகரச் செயலா் சேகனா, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் வெங்கடேசன், மாவட்ட துணை அமைப்பாளா்கள் விவசாய அணி சாமிதுரை, மாணவரணி ராஜா, கிட்டு, கடையம் ஜெயக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் அழகு சுந்தரம் வரவேற்றாா். ஆா். பி. முருகன் நன்றி கூறினாா்.