தென்காசியில் ரூ. 7 கோடியில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 7 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசியில் ரூ. 7 கோடியில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 7 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், காளிதாசன் நகா்,கீழப்புலியூா் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 7 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

தென்காசி வடக்கு மாசி வீதியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, தென்காசி எம்.எல்.ஏ. செல்வ மோகன்தாஸ் பண்டியன் தலைமை வகித்து பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், அதிமுக நகரச் செயலா் சுடலை, ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், அமல்ராஜ், பேரூா் செயலா் காா்த்திக்குமாா், பேச்சாளா் முகிலன், சாா்பு அணி நகரச் செயலா்கள் முருகன்ராஜ், வெள்ளைப்பாண்டி, மாவட்டப் பிரதிநிதி மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com