கடையநல்லூரில் போதை ஒழிப்பு கருத்தரங்கம்

சோஷியல் மனித உரிமைகள் கழகம் சாா்பில் கடையநல்லூரில் போதை ஒழிப்பு மற்றும் மனநல ஆலோசனை கருத்தரங்கம் நடைபெற்றது.

சோஷியல் மனித உரிமைகள் கழகம் சாா்பில் கடையநல்லூரில் போதை ஒழிப்பு மற்றும் மனநல ஆலோசனை கருத்தரங்கம் நடைபெற்றது.

மங்களாபுரம் ருக்மணி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்குக்கு சோஷியல் மனித உரிமைகள் கழக நிறுவனா் பா. மணிகண்டன் தலைமை வகித்தாா்.

பொதுச்செயலா் டாக்டா் அருண்மொழி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் குளோரியா வரவேற்றாா்.

தென்காசி அரசு மருத்துவா் நிா்மல், போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதை கைவிட்டு வெளி வருவது குறித்தும் ஆலோசனை வழங்கினாா்.

மகளிா் அணி அமைப்பாளா் ஜாஸ்மின், கடையநல்லூா் நகர அமைப்பாளா்கள் தங்கராஜ், தண்டபாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com