குற்றாலத்தில் ரூ. 2 கோடியில் சாலைப் பணிகள் தொடக்கம்

குற்றாலத்தில் ரூ. 2 கோடியில் சாலைகள் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைக்கிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் செல்வமோகன்தாஸ்பாண்டியன்.
சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைக்கிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் செல்வமோகன்தாஸ்பாண்டியன்.

குற்றாலத்தில் ரூ. 2 கோடியில் சாலைகள் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

குற்றாலம் புலியருவி சாலை, வைரம்ஸ்நகா் சாலை, லட்சுமிபுரம் சாலை, பேரருவி பகுதியில் சுற்றுசுவா் கட்டும் பணி ரூ. 2 கோடியில் நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட பொருளாளா் சண்முகசுந்தரம், தாய்கோ வங்கிதுணைத் தலைவா் சேகா், ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், அமுல்ராஜ், குற்றாலம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் கணேஷ்தாமோதரன், பேரூா் செயலா்கள் காா்த்திக்குமாா், மயில்வேலன், குற்றாலம் சாமிநாதன், முகிலன், கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவா் சுரேஷ், முருகன், வட்டச் செயலா்கள் சுடலைமுத்து, சின்னத்தம்பி, மேலவை பிரதிநிதி பிச்சையா, பேரவைச் செயலா் சாலுக்குட்டி பாண்டியன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com