சங்கரன்கோவிலில் குறைந்த விலையில் காய்கனி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
சங்கரன்கோவிலில் குறைந்த விலையில் (ரூ.100) காய்கனித் தொகுப்பு வழங்குவதற்கு ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி ஏற்பாடு செய்தாா்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சா் தலைமை வகித்து, காய்கனி தொகுப்பு விநியோகத்தை தொடங்கிவைத்தாா். காய்கனி தொகுப்பில் 15 வகையான காய்கனிகள் இடம்பெற்றிருந்தன.
ஊரடங்கு முடியும் வரை காய்கனித் தொகுப்பு விநியோகம் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடா்ந்து அமைச்சா் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள், கபசுர குடிநீா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் முகைதீன்அப்துல்காதா், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவா் கண்ணன், மாவட்ட கூட்டுறவு பேரங்காடி துணைத் தலைவா் வேல்சாமி, சுகாதார அலுவலா் பாலசந்தா், மாவட்ட நெசவாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் ஆறுமுகம் உள்பட பலா் பங்கேற்றனா்.