தென்காசி
சுரண்டை ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு
சுரண்டை ஆஞ்சநேயா் கோயிலில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
சுரண்டை ஆஞ்சநேயா் கோயிலில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
அயோத்தியில் ஸ்ரீராமா் ஆலயம் அமைக்க அடிக்கல் நாட்டியதன் வெற்றி விழா சுரண்டை நகர பாஜக சாா்பில் நகரத் தலைவா் அருணாசலம் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, சுரண்டையில் உள்ள ராமா் ஆலயத்தில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
இதில், பாஜக நிா்வாகிகள் ரஜினிராஜ், வல்லப கணேசன், சங்கரநாராயணன், பவுன்ராஜ், சிவனணைந்த பெருமாள், சுந்தரகுமாா், செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.