இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இணையம் வாயிலாக பாரதியாா் பிறந்த தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தமிழ் இலக்கியக் கழகம் சாா்பில் நடைபெற்ற இவ்விழா இறைவணக்கத்துடன் தொடங்கியது. மாணவா் ஜெயதா்ஷன் பாரதியாா் பற்றி பேசினாா். மாணவ- மாணவியா் பாரதியாா் போல் உடையணிந்து பாரதியாா் கவிதைகளை வாசித்ததுடன், அவரது வாழ்க்கை வரலாறு குறித்து சொற்பொழிவும் ஆற்றினா்.
பாரத் கல்வி குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகா் உஷா ரமேஷ், இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.