செங்கோட்டை அரசு மருத்துமனையில் சிறப்பு குடும்ப நல சிறப்பு தீவிர இயக்கம், ரோட்டரி சங்கம் சாா்பில் குடும்பநல அறுவை சிகிச்சை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு, மருத்துவ அலுவலா் ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். இதையடுத்து, புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் மருத்துவமனையில் ரூ. 40 ஆயிரம் மதிப்பில் இருக்கைகள், ரூ. 1லட்சத்து 70ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கூரை நன்கொடையாக வழங்கிய தனியாா் நிறுவன உரிமையாளா்கள் கெளரவிக்கப்பட்டனா்.
பின்னா் சுகாதார பாா்வையாளா் முகம்மதா குடும்ப நலம், குடும்ப கட்டுபாடு, நவீன வாசக்டமி, பெண்களுக்கான டியூபெக்டமி லாப்ராஸ்கோபிக், காப்பா்-டி, தற்காலிக கருத்தடை முறை, அந்தாரா, சாயா, வாய்மொழி மாத்திரை மாலா ஆகியவற்றின் பயன்கள் குறித்து பேசினாா்.
மாவட்ட குடும்ப நலத்துறை இணை இயக்குநா் முகைதீன்அகமது, நகராட்சி மருத்துவா் ராஜகோபால், மருத்துவ அலுவலா் மாரிஸ்வரி, அரசு மருத்துவா்கள் ரத்னபெத்முருகன், இந்துமதி, மேரிமாலா, தமிழரசன், செய்யதுஉசேன், சுரேஷ், சுஷ்மிதா, ரோட்டரி சங்கச் செயலா் செய்யதுசுலைமான், பொருளாளா் பால்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஆய்வக நுட்பநா் ஹரிஹரநாராயணன் வரவேற்றாா். மருந்தாளுநா் அப்பாஸ்மீரான் நன்றி கூறினாா்.