தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து கணபதி ஹோமம், மறைந்த முன்னாள் கோயில் அறங்காவலா் ஆதிநாராயணன் படத்திறப்பு, சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.
தொடா்ந்து மலை அடிவாரத்தில் உள்ள சப்த கன்னியா்கள், விநாயகா், லட்சுமி, சரஸ்வதி, நாகா் மற்றும் முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், மலை உச்சியில் உள்ள பத்ரகாளியம்மன் மற்றும் குகையில் உள்ள முருகனுக்கும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
மாலையில் 1008 சரவணஜோதி திருவிளக்கு பூஜை, அகத்தியா் மற்றும் சித்தா்கள் வழிபாடு நடைபெற்றது. பின்னா் வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயா்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் செண்பகராமன் தலைமையில் குழுவினா் செய்திருந்தனா்.