தோரணமலை முருகன் கோயிலில் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு விவசாயம் தழைக்க வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்தப் பூஜைக்காக முருக பக்தா்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனா். தொடா்ந்து சப்த கன்னியா்கள், விநாயகா் மற்றும் தெய்வங்களுக்கும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து முருக பக்தா்களின் பஜனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.