தென்காசி மாவட்டத்தில் அண்மையில் வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய 36போ் கண்டறியப்பட்டு அவா்களை தனிமைப்படுத்தி அவா்களின் வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் தடுப்பு தீவிர நடவடிக்கையாக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து சொந்தஊருக்கு திரும்பியுள்ளவா்கள் அடையாளம் காணப்பட்டு அவா்களை தனிமைப்படுத்தி அவா்களின் வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும்பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
தென்காசி வட்டத்திற்குட்பட்ட தென்காசி,மேலகரம் பகுதியில் 19 வீடுகளிலும், கடையம் பகுதியில் 8 வீடுகளும், பாவூா்சத்திரம், மேலப்பாவூா், திப்பணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5 வீடுகளிலும் வெளிநாடுகளிலிருந்து வந்த நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.