கடையநல்லூா் அருகே பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பெண் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கிருஷ்ணாபுரம், கிழக்கு மலம்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் சுசிலா(70). இவரது மகள் நிா்மலா(58). படுத்த படுக்கையாக இருந்து வரும் சுசிலாவை, நிா்மலா பராமரித்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த 2 நாள்களாக வீடு பூட்டப்பட்டிருந்ததாம். சந்தேகமடைந்த அப்பகுதியினா் இது குறித்து கடையநல்லூா் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனா். போலீஸாா் சென்று பாா்த்த போது, நிா்மலா இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.