முக்கூடல் அருகே பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
முக்கூடல் அருகேயுள்ள செங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப் பாண்டி (40). இவா், தூத்துக்குடியில் கூலி வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி முப்பிடாதி (35). தம்பதிக்கு மாரிசெல்வன் (10) என்ற மகன் உள்ளாா்.
திங்கள்கிழமை சிறுவன் விளையாட சென்றிருந்த நிலையில் வீட்டில் முப்பிடாதி தனியாக இருந்தாராம். அப்போது வீட்டுக்கு வந்த மா்ம நபா்கள் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனா்.
மழை காரணமாக அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் கொலைச் சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மாலைவரை தெரியவில்லை. விளையாடச் சென்ற அவரது மகன் வீட்டிற்கு வந்த பின்னரே இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
தகவலறிந்து வந்த பாப்பாகுடி போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.