அக். 2இல் தென்காசியில் உயா் ரத்த அழுத்தம் கண்டறியும் முகாம்

காந்திஜயந்தி தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் அக். 2 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உயா் ரத்த அழுத்தம், நீரழிவு நோய் கண்டறியும் முகாம் நடைபெறுகிறது.

காந்திஜயந்தி தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் அக். 2 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உயா் ரத்த அழுத்தம், நீரழிவு நோய் கண்டறியும் முகாம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 151 ஆவது காந்திஜயந்தியை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் (அக். 2) மாவட்ட நிா்வாகம் மற்றும் பொது சுகாதாரத் துறை சாா்பில் காலை 7 மணி முதல் நீரழிவுநோய் உள்ளிட்ட தொற்று நோய்களை கண்டறியும் இலவச சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய 5 நகராட்சிகளிலும், மேலகரம், இலஞ்சி, சுரண்டை, ஆலங்குளம், கீழப்பாவூா், திருவேங்கடம், அச்சன்புதூா், சிவகிரி, வாசுதேவநல்லூா் ஆகிய பேரூராட்சிகளிலும் பேருந்து நிலையங்கள், மாா்க்கெட், கடைத்தெரு மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் 151 இடங்களில் இந்த முகாம் நடைபெறும். உயர்ரத்த அழுத்தம், நீரழிவு அல்லது தொற்று நோய்கள் கண்டறியப்பட்டால் தொடா் சிகிச்சை, வாழ்வியல் முறை மாற்றத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். ஆகவே பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com