சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்கள்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சாா்பில் கருத்தானூரில் நகரும் நியாயவிலைக் கடை தொடங்கப்பட்டது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் செல்வராஜ் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவா் வண்ணகருப்பசாமி, அதிமுக நிா்வாகிகள் ரமேஷ், தா்மராஜ், ஆதிராம் மற்றும் கூட்டுறவு சங்க இயக்குநா் தா்மராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.