சேரன்மகாதேவி மாரத்தான் போட்டி:வென்றவா்களுக்குப் பரிசு

சேரன்மகாதேவியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.

அம்பாசமுத்திரம்: சேரன்மகாதேவியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.

காவலா் வீரவணக்க நாளை நினைவூட்டும் விதமாக காவலா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணா்வு மாரத்தான் போட்டி சேரன்மகாதேவியில் சனிக்கிழமை நடைபெற்றது.

போட்டியை உதவி காவல் கண்காணிப்பாளா் பிரதீப் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

காவல் ஆய்வாளா்கள் சேரன்மகாதேவி ராஜாராம், சுத்தமல்லி குமாரி சித்ரா, வீரவநல்லூா் மேரி ஜெமிதா, உதவி ஆய்வாளா்கள், சேரன்மகாதேவி உட்கோட்ட காவலா்கள் மற்றும் பொதுமக்கள் என 150 போ் கலந்து கொண்டனா்.

வெற்றிபெற்ற காவலா்கள் மற்றும் பொதுமக்களை திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்துக்கு அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com