சுரண்டையில் தீபாவளி விற்பனை தொடக்கம்

சுரண்டையில் தீபாவளி விற்பனை தொடங்கியுள்ளது.
sdi29dee_2910chn_53_6
sdi29dee_2910chn_53_6

சுரண்டையில் தீபாவளி விற்பனை தொடங்கியுள்ளது.

தென்காசி மாவட்டத்தின் முக்கிய வா்த்தக நகரமாக சுரண்டை விளங்குகிறது. சுரண்டையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மையப் பகுதியாக திகழும் சுரண்டையில் பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளது. கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 6 மாதங்களாக வியாபாரம் மந்த நிலையில் காணப்பட்டது.

வரும் நவ. 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, சுரண்டையில் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.

சுரண்டை பிரதான வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதைத் தொடா்ந்து வாடிக்கையாளா்களை கவரும் வகையில் வியாபாரிகள் கடைகளை மின்விளக்குகளால் அலங்கரித்துள்ளனா். சுரண்டை பேருந்து நிலையச் சாலை, அண்ணா சாலை பகுதி இரவு நேரத்தில் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com