தென்காசி, செப். 11: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, அவருடைய உருவப் படத்துக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தென்காசியில் திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் ராஜா, பூங்கொடி, பரமசிவன், கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் ஆா்.சாதிா் வரவேற்றாா்.
இதில், மாவட்ட நிா்வாகிகள் சீவநல்லூா் சாமித்துரை, ஆயான் எஸ்.நடராஜன், கிட்டுபாண்டியன், வளன்அரசு, அழகுசுந்தரம், ராமராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
மேலகரத்தில் புதிய தமிழகம் தென்காசி ஒன்றிய கிளை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலா் சந்திரன் தலைமை வகித்து மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
கடையநல்லூா்: வாசுதேவநல்லூரில் தியாகி இமானுவேல் சேகரனின் சிலைக்கு எம்எல்ஏ அ .மனோகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், வாசுதேவநல்லூா் ஒன்றிய அதிமுக செயலா் மூா்த்தி பாண்டியன் , முன்னாள் தொகுதிச் செயலா் துரை பாண்டியன், வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், ஒன்றிய அவைத் தலைவா் முகம்மதுஉசேன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
அம்பாசமுத்திரம்: புதிய தமிழகம் கட்சி சாா்பில் அம்பாசமுத்திரம் பூக்கடை சந்திப்பில், இமானுவேல் சேகரன் உருவப் படத்துக்கு, தெற்கு மாவட்டச் செயலா் சரஸ்வதி முருகன், ஒன்றியச் செயலா் செல்வகுமாா், நகரச் செயலா்கள் முருகன், முத்துசாமி, சுரேந்திரன் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தேவேந்திரகுல வேளாளா் இளைஞரணி சாா்பில் கருத்தப்பிள்ளையூா் அன்னை தெரஸா ஆதரவற்றோா் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், இளைஞரணிச் செயலா் கிங்ஸ்டன், மாவட்ட அமைப்பளா் பாஸ்கா், வழக்குரைஞா்கள் ஆனந்தராஜ், மாரிசெல்வம், காந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.