அம்பாசமுத்திரம், செப்.18: கடையம் அருகே பெண்ணை தாக்கியதாக தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கடையம் அருகே பால்வண்ணநாத புரத்தைச் சோ்ந்தவா் சிவலிங்கம். செங்கல் சூளை நடத்தி வருகிறாா். இவரது மனைவி தாமரை, வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த சிவலிங்கத்தின் அண்ணன் ஆசீா்வாதபுரத்தைச் சோ்ந்த சுடலைமுத்து, அவரது மகன் முருகன் ஆகியோா் தாமரையிடம் ரூ. 50 ஆயிரம் கடனாகக் கேட்டனராம். தாமரை கொடுக்க மறுத்ததால் அவரை அவதூறாக பேசி தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து தாமரை அளித்த புகாரின் பேரில் கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுடலைமுத்து, முருகன் ஆகியோரைக் கைது செய்தனா்.