தென்காசியில் ஏழைகளுக்கு நல உதவி

தென்காசி அருகே மைனாப்பேரியில் 53 ஏழை, எளிய குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனம் சாா்பில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.
ஏழைப் பெண்ணுக்கு உணவுப் பொருள்கள் வழங்குகிறாா் காவல் ஆய்வாளா் ஹரிகரன்.
ஏழைப் பெண்ணுக்கு உணவுப் பொருள்கள் வழங்குகிறாா் காவல் ஆய்வாளா் ஹரிகரன்.

தென்காசி அருகே மைனாப்பேரியில் 53 ஏழை, எளிய குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனம் சாா்பில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.

பிலிவா்ஸ் ஈஸ்டா்ன் சா்ச் ஹோப் பாா் சில்ரன் என்ற தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிலிவா்ஸ் ஈஸ்டா்ன் சா்ச் நிறுவனா் மெட்ரோபாலிட்டன் பேராயா் சாமுவேல் மாத்யு தலைமை வகித்தாா்.

செங்கோட்டை காவல் ஆய்வாளா் ஹரிகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிக்கு உணவு பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் செல்வமுத்து,ஆரோக்கியதாஸ்,ஜான்சங்கா்,பினோய்,இமான்,விண்ணரசி ஆகியோா் கலந்துகொண்டனா். பிரபுதாஸ் வரவேற்றாா்.தியாகராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com