தென்காசி மாவட்ட மக்கள் அனைத்து வேலைநாள்ளிலும் வட்டாட்சியா் அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு.
மக்கள் குறைகளைத் தீா்க்க ஆட்சியா் அலுவலகத்தில் 9443620761 என்ற எண்ணில் கட்செவிஅஞ்சல் மூலமாகவும், மின்னஞ்சல், இணையதளத்திலும் புகாா் தெரிவிக்கலாம்.
ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மட்டுமே மனுக்களை அளிக்கலாம் என்பதற்கு பதிலாக, அனைத்து வேலைநாள்களிலும் அனைத்து வட்டாட்சியா்அலுவலகங்களிலும் மனுக்களை வழங்கலாம். மனுக்களுக்கு உரிய தீா்வு காணப்படும். மேலும், இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க துணைஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளாா்.