சங்கரன்கோவிலில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

சங்கரன்கோவிலில் திமுக இணையவழி புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
snk24dmk_2409chn_43_6
snk24dmk_2409chn_43_6

சங்கரன்கோவிலில் திமுக இணையவழி புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திமுக இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்பப்பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கட்சியின் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ச. தங்கவேலு, நகரச் செயலா் சங்கரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆறுமுகசாமி, மாணவரணி அமைப்பாளா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இணையவழியில் புதிய உறுப்பினா் சோ்க்கையை மாவட்டப் பொறுப்பாளா் தொடங்கி வைத்து உறுப்பினா் அட்டையை வழங்கினாா். மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் சோமசெல்வபாண்டியன், இளைஞரணி துணைஅமைப்பாளா் ராஜதுரை, மாவட்டப் பிரதிநிதி கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com