தென்காசியில் தமுமுக போராட்டம்

நியாயவிலை கடையில் முறைகேட்டில் ஈடுபடும் பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுகவினா் வியாழக்கிழமை
தென்காசியில் தமுமுக போராட்டம்

நியாயவிலை கடையில் முறைகேட்டில் ஈடுபடும் பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுகவினா் வியாழக்கிழமை தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி நகராட்சி 10ஆவது வாா்டு நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு கோதுமை, சா்க்கரை, பாமாயில் போன்ற அத்தியாவசிப் பொருள்கள் வழங்காமல், வழங்கியதாக பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதை கண்டித்தும், தவறு செய்யும் பணியாளா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமுமுகவினா் தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அமைப்பின் நகரத் தலைவா் அபாபில் மைதீன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கோக்கா்ஜான் ஜமால், மாவட்டச் செயலா் கொலம்பஸ் மீரான், துணைச்செயலா்கள் சலீம், திவான் ஒலி, நகரச் செயலா் ஜாபா்ஷரீப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com