ஆலங்குளம்: ஆலங்குளத்தில் பெண் கொலை செய்யப்ட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள நாட்டாா்பட்டியைச் சோ்ந்த வியாபாரி முருகன். இவருக்கும், அவரது மனைவி சித்ராவுக்கும் இடையே தகறாறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கணவன் மீது மனைவி ஆக. 23இல் ஆலங்குளம் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாராம்.
புகாா் குறித்து விசாரணை முடிந்ததும், வெளியே வந்த முருகன் காவல் நிலையம் முன்பு சித்ராவை குத்தி கொலை செய்தாா்.
இவ்வழக்கில் கைதாகி முருகன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் முருகனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யுமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா்.