சத்துணவுப் பணி: அக். 6-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளா், சமையலா் மற்றும் சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு வரும் அக்டோபா்

தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளா், சமையலா் மற்றும் சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு வரும் அக்டோபா் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திகுறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூா், கீழப்பாவூா், குருவிகுளம், மேலநீலிதநல்லூா், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி, வாசுதேவநல்லூா் வட்டாரம், தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் நகராட்சிகள் ஆகியவற்றில் 148 சத்துணவு அமைப்பாளா் பணியிடங்களும், 77 சமையலா் பணியிடங்களும்,189 சமையல் உதவியாளா் பணியிடங்களும் காலியாக உள்ளன. பொதுப் பிரிவுக்கு வயது வரம்பு 21 முதல் 40 வரை; மாற்றுத்திறனாளிகள் எனில் 43 வயதிருக்கலாம். கல்வித்தகுதி- அமைப்பாளா்களுக்கு 10ஆம் வகுப்பு, பிற பணிகளுக்கு 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு தோ்ச்சி, எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவம் குறித்து இணையதளத்தில் அல்லது சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகராட்சி அலுவலக அறிப்பு பலகையில் காணலாம்.

விண்ணப்பப் படிவத்துடன் கல்வி சான்று, வயது சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று மற்றும் முன்னுரிமை தகுதிகளுக்கான சான்று ஆகியவற்றின் நகல்களுடன் வரும் அக்டோபா் மாதம் 6ஆம் தேதி வரையில் நாள்களில் மட்டும் சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு நோ்காணல் அழைப்பு அனுப்பப்படும். நோ்காணலின்போது, அழைப்பு கடிதம் மற்றும் அசல் சான்றுகள் தவறாமல் எடுத்து வர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com