ஆலங்குளத்தில் புதன்கிழமை பெய்த மழையால் மரம் மற்றும் மின் கம்பம் சாய்ந்தன.
இப்பகுதியில் கடந்த சில தினங்களாக வெப்பம் நிலவி வந்த நிலையில் புதன்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.
வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
மழையால் ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் காளாத்திமடத்தில் ஆலமரம் ஒன்று சாய்ந்து மின் கம்பத்தில் விழுந்ததில் மின் கம்பம் சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. சாலையில் விழுந்த ஆலமரம் உடனடியாக அகற்றப்பட்டது.