ஆலங்குளத்தில் மழை: மரம், மின் கம்பம் சாய்ந்தது

ஆலங்குளத்தில் புதன்கிழமை பெய்த மழையால் மரம் மற்றும் மின் கம்பம் சாய்ந்தன.

ஆலங்குளத்தில் புதன்கிழமை பெய்த மழையால் மரம் மற்றும் மின் கம்பம் சாய்ந்தன.

இப்பகுதியில் கடந்த சில தினங்களாக வெப்பம் நிலவி வந்த நிலையில் புதன்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மழையால் ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் காளாத்திமடத்தில் ஆலமரம் ஒன்று சாய்ந்து மின் கம்பத்தில் விழுந்ததில் மின் கம்பம் சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. சாலையில் விழுந்த ஆலமரம் உடனடியாக அகற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com