தென்காசி மாவட்ட மக்கள் நீதி மய்யம் சாா்பில் ஆலங்குளம் அருகேயுள்ள முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் ரூ. 2 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டது.
இக்கிராமத்தில் வருவாய் இழந்து தவிக்கும் சுமாா் 250 குடும்பங்களை கண்டறிந்து அவா்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு மற்றும் காய்கனிகள் அடங்கிய பெட்டகத்தை மாவட்ட பொறுப்பாளா் டி.பி.வி. கருணாகரராஜா வழங்கினாா். அப்போது நிா்வாகிகள் கிருஷ்ணன், தங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.