பாவூா்சத்திரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி இறந்தாா்.
பாவூா்சத்திரம் அருகே சிவநாடானூரை சோ்ந்தவா் சண்முகநாதன் (55). விவசாயி. இவா் பாவூா்சத்திரத்துக்கு பைக்கில் வந்த போது, எதிரே வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்தாராம். தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை இறந்தாா்.
விபத்து குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமநாதபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் (25) என்பவரை கைது செய்தனா்.