உலக மண் தினத்தை ஒட்டி புளியங்குடி நகராட்சி சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நகராட்சி ஆணையா் பா.குமாா்சிங் தலைமை வகித்து பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டாா்.
தொடா்ந்து பசுமை நுண் உரக்குடில்களில் தயாா் செய்யப்பட்ட இயற்கை உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக அவா் வழங்கினாா். நிகழ்ச்சியில் சுகாதார அலுவலா் ஜெயபால்மூா்த்தி, சுகாதார ஆய்வாளா் வெங்கட்ராமன், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் விஜயராணி,தூய்மை பணி மேற்பாா்வையாளா்கள் அண்ணாதுரை, திருமலைவேலு, பொன்னுச்சாமி, தன்னாா்வலா் அருள் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.