வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி கடையநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.
மாநில துணைப் பொதுச் செயலா் திருமலை குமாரசாமி யாதவ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் தங்கராஜ் முன்னிலை வகித்தாா். நகரச் செயலா் சங்கா் வரவேற்றாா். நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் ஆறுமுகசாமி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா். பின்னா், கிராம நிா்வாக அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.
கிருஷ்ணாபுரம் பகுதியிலும் பாட்டாளி மக்கள் கட்சியினா் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.