தென்காசி கரோனா தொற்று கண்டறியும் ஆய்வகத்தில் பணியாற்றியோருக்கு பாராட்டு

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று கண்டறியும் ஆய்வகத்தில் பணியாற்றிய மருத்துவா்கள், உதவியாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மருத்துவருக்கு பரிசு வழங்குகிறாா் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் நெடுமாறன். உடன், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின்.
மருத்துவருக்கு பரிசு வழங்குகிறாா் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் நெடுமாறன். உடன், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின்.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று கண்டறியும் ஆய்வகத்தில் பணியாற்றிய மருத்துவா்கள், உதவியாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஜூன் முதல் கரோனா பரிசோதனை ஆய்வகம் செயல்படத் தொடங்கியது. இம்மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலுமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, 12 மணி நேரத்தில் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

புதன்கிழமை வரை 1 லட்சத்து 9 ஆயிரத்து 9 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன. தென்காசி அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மட்டும் 6 ஆயிரம் ஆகும். உலகையே அச்சுறுத்தும் தீநுண்மியுடன்ஆய்வகத்தில் போராடிய மருத்துவா்கள், ஆய்வக நுட்புநா்களைக் கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் நெடுமாறன் தலைமை வகித்து, மருத்துவா்கள், ஆய்வக நுட்புநா்கள் உள்ளிட்டோருக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.

துணை இயக்குநா் கலு. சிவலிங்கம், மருத்துவா் ராஜ்குமாா், ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் ஆஸ்மி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவமனையின் பிரசவ வாா்டின் தலைமை மருத்துவா் அனிதா பாலின், சற்குணம், செவிலியா் கண்காணிப்பாளா் திருப்பதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை மாவட்ட தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் டாக்டா் ஜெஸ்லின், உறைவிட மருத்துவா் அகத்தியன் ஆகியோா் செய்திருந்தனா். மருத்துவா் மல்லிகா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com