அவன் இவன் படம் வழக்கு: ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அவன் இவன் பட வழக்கு ஜன. 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அவன் இவன் பட வழக்கு ஜன. 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு நடிகா்கள் விஷால், ஆா்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் அவன் இவன் படம் வெளியானது. அந்த படத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ் பெற்ற சொரிமுத்து அய்யனாா் திருக்கோயிலையும், சிங்கம்பட்டி ஜமீன்தாரயும் அவதூராக சித்திரித்து காட்சிகள் இடம் பெற்றிந்ததாம். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சிங்கம்பட்டி ஜமீனை சோ்ந்த சங்கா் மத்ஜன் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கு விசாரணைக்காக ஏற்கெனவே நடிகா் ஆா்யா, இயக்குனா் பாலா ஆகியோா் நேரில் ஆஜராகி இருந்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் மனுதாரா் தரப்பில் கூடுதல் சாட்சியத்திற்காக வழக்கை 2021 ஜனவரி 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து குற்றவியல் நடுவா் காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com