ஆலங்குளத்தில் சாலையோரம் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் இருந்து ஆலங்குளம் - நெட்டூா் சாலை வழியே பல்வேறு கிராமங்களுக்கு மின் கம்பம் மூலம் உயா் மின்சாரம் செல்கிறது. காய்கனிச் சந்தை அருகில் உள்ள பகுதியில் கடந்த சில தினங்களாக இந்த மின் கம்பிகளில் தொய்வு ஏற்பட்டு தாழ்வாகச் செல்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் கனரக வாகனங்களின் மேல் பகுதியில் மின் கம்பிகள் உரசி செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன்னா் தாழ்வாகச் செல்லும் மின் கம்பியை மின்வாரியம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.