புளியங்குடியில் திமுக ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வடக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு மாவட்டப் பொறுப்பாளா் துரை தலைமை வகித்தாா் .

கடையநல்லூா் நகரச் செயலா் சேகனா, ஒன்றியச் செயலா்கள் செல்லத்துரை, ரவிசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புளியங்குடி நகரப் பொறுப்பாளா் ராஜ்காந்த் வரவேற்றாா்.

தென்காசி வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிராம சபை கூட்டங்களை நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், டிச. 28 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் திமுக தோ்தல் அறிக்கை குழுத் தலைவா் டி. ஆா். பாலுவிடம் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் மனு அளிக்கலாம் என மாவட்டப் பொறுப்பாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com