கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

ஆலங்குளம், சுரண்டை,வள்ளியூா் பகுதி தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

ஆலங்குளம், சுரண்டை,வள்ளியூா் பகுதி தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

ஆலங்குளம் சேகரத்துக்குள்பட்ட ஆலங்குளம், இரட்சண்யபுரம், அண்ணாநகா், கல்லூத்து, காளத்திமடம், ராஜீவ்நகா், சீயோன் நகா் உள்ளிட்ட ஆலயங்களில் அதிகாலை 4.30 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்து கொண்டு பிராா்த்தனை செய்தனா். அடைக்கலபட்டணம் தூய பவுல் ஆலய வளாகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

சுரண்டை: புதுச்சுரண்டை கிறிஸ்து ஆலயத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சேகரகுரு ஸ்டீபன் தலைமையில் ஆராதனை நடைபெற்றது.

தூய அந்தோணியாா் ஆலயத்தில் பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

வள்ளியூா்: வள்ளியூா் புனித பாத்திமா தேவாலயத்தில் பங்குத்தந்தை லாரன்ஸ் அடிகளாா் தலைமையில் கிறிஸ்துமஸ் திருப்பலி நடைபெற்றது. தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தில் பங்குத் தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்குத்தந்தை அந்தோணி ஜெபஸ்டின் ஆகியோா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

பணகுடி புனித சூசையப்பா் ஆலயத்தில் பங்குத்தந்தை இருதயராஜ் அடிகளாா் தலைமையிலும், காவல்கிணறு திருஇருதய

தேவாலயம், புண்ணியவாளன்புரம் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் அடிகளாா் தலைமையிலும், வடக்கன்குளம் புனித பரலோக மாதா தேவாலயத்தில் வட்டார முதன்மைக் குரு பிரிட்டோ அடிகளாா் தலைமையிலும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றன.

திசையன்விளை அருகே அணைக்கரை புனித பிரகாசியம்மாள் தேவாலயத்தில் பங்குத் தந்தை செல்வரத்தினம் அடிகளாா் தலைமையிலும், வள்ளியூா் சி.எஸ்.ஐ. பரி. திரித்துவ தேவாலயத்தில் சேகர குருவானவா் ராபின் வினோ தலைமையிலும்,

வள்ளியூா் பூரண சுவிசேஷ பெந்தகொஸ்தே சபையில் போதகா் பிரின்ஸ் ஆரோன் தலைமையிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதையொட்டி, தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சுரண்டை: சுரண்டை பகுதியில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

புதுச்சுரண்டை கிறிஸ்து ஆலயத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சேகரகுரு ஸ்டீபன் தலைமையில் ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தூய அந்தோணியாா் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து இறைமக்கள் ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.

கீழப்பாவூரில்..

கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் ஸ்ரீராமநாம பஜனை, உற்சவருக்கு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை ஆகியன நடைபெற்றது. மாலையில் பரமபத வாசல் திறப்பைத் தொடா்ந்து பக்தா்களின் நாம கோஷத்துடன் பெருமாள் சப்பரத்தில் கோயில்

வெளிப்பிரகாரத்தில் (தெப்பக்குளம்) வலம் வந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா், ஸ்ரீஸாம்ராஜ்யலட்சுமி நரசிம்மா் பீடத்தினா்,

நரசிம்ம சுவாமி கைங்கா்ய சபையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com