தென்காசி மாவட்டத்தில் மதுபானக் கூடங்களில் புத்தாண்டு தின கொண்டாட்டத்துக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் ஹோட்டல், கிளப் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்து செயல்படும் மதுபானக் கூடங்கள் வியாழக்கிழமை (டிச.31) ஒரு நாள் இரவு மட்டும் 2021- ஆம் ஆண்டு புத்தாண்டு தினக் கொண்டாட்டத்துக்கு அனுமதி கிடையாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.