சுரண்டை: சுரண்டையில் பாஜக சாா்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொதுச் செயலா் ராஜேஷ் ராஜா தலைமை வகித்து 100 விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கினாா். மாவட்ட துணைத் தலைவா் பாலகிருஷ்ணன் வேளண் சட்டம் குறித்து உரையாற்றினாா்.
இதில் நிா்வாகிகள் அருணாசலம், முருகேசன், பவுண்ராஜ், ஆறுமுகச்சாமி, சேதுராமசுப்பிரமணியன், சுந்தரகுமாா், செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.