தென்காசி மாவட்டத்தில்4.35 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

தென்காசி மாவட்டத்தில் 4லட்சத்து 35ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 4லட்சத்து 35ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு. தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, தென்காசி மாவட்டத்தில் 4 லட்சத்து 38 ஆயிரத்து 515 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கைத் தமிழா் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 178 குடும்பங்களுக்கும் ரொக்கமாக ரூ. 2 ஆயிரத்து 500, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை 2021-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்க அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 2,500- ரொக்கமும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் சுழற்சி முறையில் பெற ஏதுவாக நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும், பிற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும் வழங்கிடவும், வழங்கும் நாள், நேரம், போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் டிச. 30 ஆம் தேதிக்குள் வீடுதோறும் சென்று நியாய விலைக் கடை பணியாளா்கள் மூலம் வழங்கிடம் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் எந்தவித சிரமமும் இன்றி பொங்கல் சிறப்புத் தொகுப்பினை பெற்று பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com