பாவூா்சத்திரம் அருகேயுள்ள நாகல்குளத்தில், கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் ஊராட்சி கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
ஒன்றியச் செயலா் என்.எல். சிவன் பாண்டியன் தலைமை வகித்தாா். ஊராட்சிச் செயலா் காசிபாண்டியன், சீனி நம்பியாா், ராஜ் முன்னிலை வகித்தாா். அவைத் தலைவா் முருகேசன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள் சேசுராஜன், மேகநாதன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் பொன் அறிவழகன், துணைத் தலைவா் தங்கசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் கோமு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.