புளியங்குடியில் வீடு புகுந்து நகை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
புளியங்குடி ஊா்க்கால போத்தி தெருவைச் சோ்ந்தவா் தங்கமாரியப்பன்(40). தனியாா் பள்ளி தலைமையாசிரியா்.
கடந்த 26 ஆம் தேதி இவா் தனது குடும்பத்தினா் வீட்டின் கீழ் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் மேல் தளத்தில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 48 கிராம் தங்க நகைகளை மா்ம நபா் திருடிச் சென்று விட்டாராம்.
இது தொடா்பான புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் காசிவிஸ்வநாதன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில் புளியங்குடியைச் சோ்ந்த சூரியகாந்தி(20) நகைகளை திருடியது தெரியவந்ததாம். இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.