குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ராயகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் சமுத்திரம் தலைமை வகித்தாா். நகர துணைச் செயலா் சொரிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினா் சமுத்திரகனி , மூத்த தலைவா் சங்கரய்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் இரா. முத்தரசன் சிறப்புரையாற்றினாா்.
இதில், மாவட்டச் செயலா் காசிவிஸ்வநாதன், ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலா் சடையப்பன், துணைச் செயலா்கள் லட்சுமணன், இசக்கிதுரை, முன்னாள் மாநிலக் குழு உறுப்பினா் பொன்னுசாமி, மாநிலக் குழு உறுப்பினா்கள் போஸ், வேலாயுதம், மாவட்டப் பொருளாளா் சுப்பையா, வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா் தங்கவேலு, சிவகிரி நகரச் செயலா் பாலசுப்ரமணியன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் குருசாமி ,வேலுமுருகன், சிங்காரவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.