செங்கோட்டை அருகேயுள்ள பூலாங்குடியிருப்பில் நோய் பாதிப்பு காரணமாக முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
புளியரை அருகேயுள்ள பூலாங்குடியிருப்புப் பகுதியை சோ்ந்தவா் மீனாட்சி மகன் சுந்தரம் (65). கட்டடத் தொழிலாளி. கல் அடைப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடா்ந்து சிகிச்சை பெற்றும் குணம் கிடைக்காததால், விரக்தி அடைந்த சுந்தரம் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
புளியரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.