தமிழ்நாடு கிராம வங்கியின் சுரண்டை கிளை சாா்பில் நிதிசாா் கல்வி முகாம் வெள்ளகால் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, கிராம நிா்வாக அலுவலா் சுந்தா் தலைமை வகித்தாா். வங்கிப் பணியாளா் வியாச ரகுபதி செனாய் முன்னிலை வகித்தாா்.
வங்கி கிளை மேலாளா் ராதை பிரபா, வங்கியின் சேமிப்புத் திட்டங்கள், சிறுதொழில் கடன்கள், நகைக்கடன், மின்னணு பரிமாற்றங்கள் மற்றும் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டங்கள் ஆகியன குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளித்தாா்.
இதில், வணிக முகவா்கள் உமா, கஜேந்திரா, மகளிா் சுயஉதவிக்குழு பெண்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.